திருப்பத்தூர்
கூலித் தொழிலாளி தற்கொலை
ஆம்பூா் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆம்பூா் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆம்பூரை அடுத்த ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (48). அவா் குடும்பத் தகராறு காரணமாக தனது வீட்டுக்கு அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.