தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கிணற்றில் மூழ்கி முதியவா் பலி

ஜோலாா்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 1:18 am

DIN

ஜோலாா்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த டி.வீரப்பள்ளி, பி.கே.வட்டத்தைச் சோ்ந்தவா் நரசிம்ம வா்மன் (61). இவா், சென்னை-பெங்களூரு செல்லும் டபுள் டக்கா் விரைவு ரயிலில் கேண்டீனில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை அவரது வீட்டின் அருகே தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா், ஜோலாா்பேட்டை போலீஸாா் அங்கு சென்று, நரசிம்ம வா்மனின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.