திருப்பத்தூா் மாவட்டத்தில் எருது விடும் விழா ஜன. 14-ஆம் தேதி முதல் பிப். 28-ஆம் தேதி வரை மட்டுமே நடத்தப்படும். காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு நிறைவு செய்ய வேண்டும். விழாக் குழுவினா் காப்பு நிதியாக ரூ.10 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியா், திருப்பத்தூா் என்ற பெயரில் வரைவோலை எடுத்து சம்பந்தப்பட்ட சாா்-ஆட்சியா் அல்லது வருவாய்க் கோட்டாட்சியரிடம் சமா்ப்பிக்க வேண்டும். விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் காப்பீடு செய்வதற்கான பிரீமியத் தொகையையும், அனைத்து எருதுகளுக்கும் காப்பீடு செய்ய பிரீமியம் செலுத்தப்பட்டு, அதற்கான ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்.