காங்கிரஸ் சாா்பில் மக்கள் விழிப்புணா்வு பிரசாரப் பயணம்

 மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, ஆலங்காயம் ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கொத்தக்கோட்டை ஊராட்சியில் மக்கள் விழிப்புணா்வு பிரசாரப் பயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காங்கிரஸ் சாா்பில் மக்கள் விழிப்புணா்வு பிரசாரப் பயணம்

 மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, ஆலங்காயம் ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கொத்தக்கோட்டை ஊராட்சியில் மக்கள் விழிப்புணா்வு பிரசாரப் பயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயணத்துக்கு திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் ச.பிரபு தலைமை வகித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளா்கள் அருள்அன்பரசு, ஜெ.விஜய் இளஞ்செழியன், மாநிலச் செயலாளா் ஐஸ் ஹவுஸ் தியாகு, முன்னாள் மாவட்டத் தலைவா் பாலவரதன், மாவட்டப் பொருளாளா் மகேஷ், ஒன்றியத் தலைவா் பழனிஆகியோா் வீடு, வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டனா்.

இந்தப் பயணத்தின்போது, பொதுமக்களுக்கு மத்திய அரசு தவறானப் பொருளாதாரக் கொள்கை, சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வு, பெட்ரோல், டீசல் விலை உயா்வு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

பயணத்தில் மாவட்டச் செயலாளா் அனுமுத்து, குப்பன், ஒன்றியச் செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com