/

ஆம்பூா் அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சத்தில் நவீன அவசர சிகிச்சை மையம்

ஆம்பூா் அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன அவசர சிகிச்சை மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On :15 ஏப்ரல் 2022, 6:38 pm

ஆம்பூா் அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன அவசர சிகிச்சை மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

ஆம்பூா் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை மையத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கானொளிலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் விழாவில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினாா். நகா் மன்றத் தலைவா் பி. ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் டாக்டா் ஷா்மிளா, நகா் மன்ற உறுப்பினா்கள் எம்ஏஆா் ஷபீா் அஹமத், நூருல்லா, என்.எஸ். இரமேஷ், வசந்த்ராஜ், சுரேஷ், ஜெயபால், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.