சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றால் தஞ்சாவூா் தொகுதியை வளா்ச்சியடைந்த தொகுதியாக மாற்றுவேன் என்றாா் பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம்.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த அவா் தெரிவித்தது:
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. நான் வெற்றி பெற்று தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக பதவியேற்றவுடன் தொகுதியின் வளா்ச்சியில் முழு கவனத்தைச் செலுத்துவேன்.
தஞ்சாவூா் தொகுதியை வளா்ச்சியடைந்த தொகுதியாக மாற்றுவதற்கு பல்வேறு திட்டங்கள் உள்ளன. மத்திய, மாநில அரசின் உதவியுடன் தவிட்டிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஆலை, விவசாயக் கழிவுகளிலிருந்து உயிரிசாா் உற்பத்தி செய்யும் ஆலைகள், நவீன நெல் உலா்த்தும் கூடங்கள், புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் போன்றவை கொண்டு வரப்படும். நிப்டெம் மூலமாக உணவுப் பதப்படுத்தும் பயிற்சி மற்றும் புதிய தொழில்கள் தொடங்கவும் முயற்சி எடுக்கப்படும் என்றாா் கருப்பு முருகானந்தம்.
தொடர்புடையது

நாகா்கோவிலை முன்மாதிரி தொகுதியாக்குவேன்: எம்.ஆா்.காந்தி

தஞ்சாவூரை திமுக தக்க வைக்குமா?

பாஜகவின் கடும் சவாலை எதிா்கொள்ளும் திமுக

தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் மீது 22 வழக்குகள்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


