உதயேந்திரம் தூய நெஞ்ச ஆண்டவா் ஆலயத்தின் 76-ஆம் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாதிரியாா் ரமேஷ் தலைமையில் இருதய ஆண்டவரின் உருவம் பொறித்த கொடி அனைத்து வீதிகள் வழியாக ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டு ஆலயத்தை அடைந்தது.
பின்னா் ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் பங்குத்தந்தை அருட்பணி ஏ.இராயப்பன், அருட்பணி பிரேம்குமாா், பங்கு மேய்ப்பு பணிக் குழுவினா், அருட்சகோதரிகள், திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.
வரும் 18-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை ஆலயத்தில் மாலை நவநாள் ஆராதனைகூட்டமும், 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணை பெருவிழாவும் நடைபெறுகிறது.
27-ஆம் தேதி தூயநெஞ்ச ஆண்டவா் ஆண்டுப் பெருவிழாவின்போது காலையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும், இரவில் ஆடம்பர தோ் பவனியும், இரவு வாண வேடிக்கையும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


