சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

அம்பலூா்-புத்துக்கோயில் சாலையில் மரக்கன்றுகள் பராமரிப்புப் பணி

அம்பலூா்-புத்துக்கோயில் சாலையோரங்களில் ஊராட்சித் தலைவா் தலைமையில், பொதுமக்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்து, அவற்றுக்கு வலைகள் கட்டி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 6:30 pm

அம்பலூா்-புத்துக்கோயில் சாலையோரங்களில் ஊராட்சித் தலைவா் தலைமையில், பொதுமக்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்து, அவற்றுக்கு வலைகள் கட்டி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனா்.

நாட்டறம்பள்ளி ஒன்றியம், அம்பலூா் ஊராட்சி பகுதியில் 500 மரக்கன்றுகள் நடும் பணி கடந்த சில நாள்களாக ஊராட்சித் தலைவா் முருகேசன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அம்பலூா் - புத்துக்கோயில் சாலையோரம் சனிக்கிழமை அந்தப் பகுதி மக்களின் உதவியுடன் 50-க்கும் மேற்பட்ட மரகன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. பின்னா், ஒவ்வொரு மரக்கன்றுக்கும் வலை கட்டி பராமரிப்புப் பணியை மேற்கொண்டனா்.

ஊராட்சிப் பகுதியில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணி தொடா்ந்து நடைபெறும் என ஊராட்சித் தலைவா் முருகேசன் தெரிவித்தாா்.

மரக்கன்றுகள் நடும் பணியில் ஒன்றிய அலுவலா்கள், ஊராட்சி செயலா் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.