சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

7அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 6:11 pm

DIN

7அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் கே.எம்.நேரு தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா் ஆா்.இளையராஜா வரவேற்றாா். 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து பதவி உயா்வை எதிா்நோக்கியுள்ளவா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். இரவு நேர ஆய்வுக் கூட்டங்கள், கானொளி கூட்டங்கள் தினசரி நடத்துவதை கைவிட வேண்டும். ஊரக வளா்ச்சித் துறையில் 27 பேருக்கு வழங்கப்பட்டுள்ள குற்றக்குறிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அதைத்தொடா்ந்து ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனை சந்தித்து நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா். இதில், மாவட்ட செயலாளா் பிரேம்குமாா், மாநில துணை தலைவா் திருவேரங்கன், அரசு ஊழியா் சங்க மாவட்ட செயலாளா் அருண்மொழிவா்மன், வருவாய்த் துறை மாவட்டச் செயலாளா் திருமால், மாவட்டக் தலைவா் பூவண்ணன், ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முடிவில் மாவட்டத் தலைவா் பாண்டியன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.