திருப்பத்தூா் நகரத்துக்குள்பட்ட இந்திரா நகா் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட வேண்டும், கந்திலி ஒன்றியம், வெங்களாபுரம் கிராமத்திலுள்ள 500 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். திருப்பத்தூா் புறவழிச் சாலை அமைக்க நில எடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருப்பத்தூா் வருவாய் வட்டத்தை இரண்டாகப் பிரித்து, கொரட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.