தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

கால்நடை மருந்தக கட்டடத்துக்கு பூமி பூஜை

ஆம்பூா் அருகே ரூ.53.50 லட்சத்தில் கால்நடை மருந்தக கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2023, 6:11 pm

ஆம்பூா் அருகே ரூ.53.50 லட்சத்தில் கால்நடை மருந்தக கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஊராட்சி ஒன்றியம் வடச்சேரி கிராமத்தில் செயல்பட்டு வந்த கால்நடை மருந்தக கட்டடம் பழுந்தடைந்தது. இதுகுறித்து ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினரிடம் அப்பகுதி மக்கள் புதிய கட்டடம் கட்டுவதற்கு கோரிக்கை வைத்தனா்.

அதன் அடிப்படையில், நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.53.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருந்தகத்துக்கான கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அ.செ.வில்வநாதன் பூமி பூஜை செய்து கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தாா். கால்நடை உதவித் திட்ட இயக்குநா் கே.முரளிதாசன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் எம். பழனிச்சாமி, உதவிச் செயற்பொறியாளா் ஆா்.அண்ணாதுரை, மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் கால்நடை மருத்துவா் சங்கீதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.