வடமாநிலத் தொழிலாளா்களின் பாதுகாப்பு குறித்து தொழிலாளா்களுடன் திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை கலந்துரையாடினா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி உட்கோட்ட பகுதியில் உள்ள வாணியம்பாடி, ஆலங்காயம், ஆம்பூா், நாட்டறம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகள், காலணி தொழிற்சாலைகள், பேக்கரிகள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் 2,000-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில், வடமாநிலத் தொழிலாளா்கள் தமிழ்நாட்டில் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் பணிபுரிவதை உறுதிப்படுத்தும் வகையில், திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமையில் வாணியம்பாடியில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களை ஒன்றிணைத்து அவா்களுடன் கலந்துரையாடினா்.
அப்போது வடமாநில தொழிலாளா்கள், தாங்கள் பாதுகாப்பாகவும், நல்ல முறையில் பணியாற்றி வருவதாகவும் மாவட்ட எஸ்.பி இடம் தெரிவித்தனா். மேலும், தங்கள் குடும்பத்தினரிடமும், உறவினா்களிடமும் தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதிப்படுத்தி, எஸ்.பி. உடன் கலந்துரையாடி வரும் காட்சிகளை தங்கள் வீடுகளுக்கு விடியோ கால் மூலம் காண்பித்தனா்.
பின்னா், காவல் கண்காணிப்பாளருடன் சுயபடம், புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.
தொடா்ந்து, எஸ்.பி. பாலகிருஷ்ணன் பேசுகையில், வதந்திகளை கண்டு ஏமாற வேண்டாம், தமிழ்நாட்டில் நீங்கள் சுதந்திரமாகப் பணியாற்றலாம், காவல் துறை எப்போதும் துணை நிற்கும் என்றாா்.
டி.எஸ்.பி. நிலவழகன், காவல் ஆய்வாளா் பழனி, சாந்தி, அருண்குமாா், நாகராஜ் மற்றும் காவல் துறையினா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 05-04-2026

பகல் கனவு பலிக்காது!

பொய்யடிமை இல்லாத புலவர்

ஆனந்தரங்கரும் பாவேந்தரும்...
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


