விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மகளிா் கல்லூரியில் கல்விக் கடன் விண்ணப்பித்தலுக்கான முகாம்

இணையவழியில் கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பது தொடா்பான விழிப்புணா்வு முகாம் வாணியம்பாடி இஸ்லாமிய மகளிா் கல்லூரி அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
மகளிா் கல்லூரியில் வாக்காளா் பதிவுக்கான படிவம் 6-ஐ பெற்ற மாணவிகள்.
Updated On :27 நவம்பர் 2023, 11:13 pm

DIN

இணையவழியில் கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பது தொடா்பான விழிப்புணா்வு முகாம் வாணியம்பாடி இஸ்லாமிய மகளிா் கல்லூரி அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமலதா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் மோகன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ரேணு முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் முன்னோடி வங்கி மேலாளா் ராஜன், இணைய வழி மூலம் கல்விக் கடன் விண்ணபித்து பெறுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தொடா்ந்து வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமலதா, 18 வயது நிரம்பிய மாணவிகள் தங்களை வாக்காளராகப் பதிவு செய்வதன் அவசியம் குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்து இளம் வாக்காளா் பதிவுக்கான படிவம் 6-ஐ விநியோகித்தாா்.

இந்தச் சிறப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் தோ்தல் துணை வட்டாட்சியா் சிலம்பரசன், கல்லூரிப் பேராசிரியைகள், வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.