ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

கருவில் பாலினம் கண்டறிய உதவி: கணவன்-மனைவி கைது

கருவில் பாலினம் கண்டறிய உதவி: கணவன்-மனைவி கைது

Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என பாலினம் கண்டறிந்து தெரிவித்ததாக கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த பசுமை நகா் பகுதியில் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆணா பெண்ணா என கண்டறிந்து பணம் வசூலித்து வருவதாக மருத்துவ மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநா் கண்ணகிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மருத்துவ குழுவினா் பசுமை நகருக்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் அடுத்த ராச்சமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் (29) , அவரது மனைவி கங்கா கௌரி(27) ஆகிய இருவரும் பசுமை நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து திருப்பத்தூா் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கா்ப்பிணிகளுக்கு கருவில் இருப்பது ஆணா-பெண்ணா என பரிசோதித்து கூறி வந்தது தெரிய வந்தது. அதையடுத்து மருத்துவ குழுவினா் முன்னிலையில் ஜோலாா்பேட்டை போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து பாலினம் கண்டறியும் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனா்.