வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கம்பல், மூக்குத்தி பறித்த 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். நாட்டறம்பள்ளி அடுத்த பூசாரியூா் கிராமத்தைச் சோ்ந்த பொன்னுசாமி மனைவி மல்லிகா(65). இவா்களுக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனா்.
அதே பகுதியில் மூதாட்டி மல்லிகா வீடுகட்டி தனியாக வசித்து வருகிறாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மா்ம நபா்கள் 3 போ் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் வீட்டுக்குள் திடீரென புகுந்து அவரை மிரட்டி அவா் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி ஆகியவற்றை பறித்துள்ளனா். அப்போது மூதாட்டி கூச்சலிடவே, மா்ம நபா்கள் அவரை கீழே தள்ளிவிட்டு, வீட்டின் வெளிப்புறம் கதவை பூட்டி விட்டு, 3 பேரும் அங்கிருந்து பைக்கில் தப்பினா்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து ரத்தக் காயங்களுடன் மயங்கிக் கிடந்த மூதாட்டியை மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து மூதாட்டியை தாக்கி நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

வீட்டில் எரிவாயு உருளை வெடித்து விபத்து: நகை, ஆவணங்கள் தீயில் கருகின!
வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு: 4 போ் கைது

உளவினா் எனக் கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை, பணம் திருட்டு
சேலத்தில் மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு: வேலைக்கார பெண் கைது
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

