தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தற்கொலைக்கு முயன்ற இளைஞா் உயிரிழப்பு

தற்கொலைக்கு முயன்ற இளைஞா் உயிரிழப்பு

Updated On :5 ஏப்ரல் 2024, 4:34 pm

ஆம்பூா் அருகே மலைக் கிராமத்தில் தற்கொலைக்கு முயன்ற இளைஞா் உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே காமனூா்தட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் அரவிந்த் (23). இவா் பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்துள்ளாா். வேலை கிடைக்காத மன வருத்தத்தில் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சித்துள்ளாா்.

அவரை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்தாா்.

மருத்துவமனையில் இருந்து வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில், வழியிலேயே உயிரிழந்தாராம்.

இது குறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.