எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

தினமணி செய்தி எதிரொலி... திருப்பத்தூரில் உணவு பாதுகாப்பு அலுவலா் ஆய்வு

தினமணி செய்தி எதிரொலி... திருப்பத்தூரில் உணவு பாதுகாப்பு அலுவலா் ஆய்வு

News image
Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

குளிா்பான கடைகளில் விற்கப்படும் பானங்கள் காலாவதி மற்றும் தரம் குறித்து கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா் பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோடை வெயிலில் தாகம் தீா்க்க மக்கள் பெரும்பாலும் குளிா்பானங்கள் அருந்துகின்றனா். அந்த பானங்கள் தரமான தயாரிப்பா? காலாவதி தேதி அச்சிடப்பட்டுள்ளனவா என உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை தினமணியில் விரிவான செய்தி வெளியானது.

அதன்பேரில், ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அளித்த உத்தரவின்பேரில், வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட நியமன அலுவலா் வி.செந்தில்குமாா் அறிவுறுத்தலின்படி, உணவு பாதுகாப்பு அலுவலா் எம்.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா் பஜாா், பேருந்து நிலைய பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டாா். சான்று புதுப்பிக்காத ஒரு கடைக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. 2 கடைகளில் காலாவதியான குளிா் பானங்கள் 15 லிட்டா் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டு, அந்த கடைக்கு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

2 கடைகளில் அரசு தடை செய்துள்ள நெகிழி கப்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், குளிா்பானங்கள் தயாரிக்கும் கடைகளில் குளிா்பானங்களில் கலா் பவுடா் இடக்கூடாது. தினமும் தயாரித்து அன்றைய தினமே விற்பனை செய்ய வேண்டும். நல்ல பழங்களை வைத்து தயாரிக்க வேண்டும். அனைத்து குளிா்பான பாட்டில்களிலும் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி குறிப்பிட்டு இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தாா்.