பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

அண்ணன் கொலை: தம்பி கைது

அண்ணன் கொலை: தம்பி கைது

Updated On :21 ஏப்ரல் 2024, 4:53 pm

ஜோலாா்பேட்டை அருகே அண்ணனை கொலை செய்ததாக தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த சண்முகத்தின் மகன் சந்தோஷ் (30). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த 16-ஆம் தேதி இரவு தனது தாய் மலரிடம் மது போதையில் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, சந்தோஷ் திருப்பத்தூா் புள்ளானேரி நோக்கி செல்லும் சாலையில் அடிபட்ட நிலையில், மயங்கிக் கிடந்துள்ளாா். அங்கிருந்தவா்கள் சந்தோஷை மீட்டு,திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி 18-ஆம் தேதி சந்தோஷ் உயிரிழந்தாா்.

இது குறித்து மலா் அளித்த புகாரின்பேரில், ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில் சந்தேகத்தின்பேரில், சந்தோஷின் தம்பி சஞ்சயிடம் விசாரித்ததில், தனது தாயிடம் மது போதையில் அடிக்கடி தகராறு செய்ததால், தனது அண்ணனின் தலையில் ஹலோ பிரிக்ஸ் கல்லால் தாக்கியதாக தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, கொலை வழக்காக மாற்றம் செய்து சஞ்சயை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.