சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

காட்டுப்பன்றி மோதியதில் தலைமைக் காவலா் காயம்

காட்டுப்பன்றி மோதியதில் தலைமைக் காவலா் காயம்

Updated On :25 ஏப்ரல் 2024, 6:11 pm

ஆம்பூா் அருகே காட்டுப் பன்றி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தலைமைக் காவலா் காயமடைந்தாா்.

உமா்ஆபாத் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவா் பிரவீன்குமாா் (35). இவா் தேவலாபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது பாலாற்றிலிருந்து திடீரென வந்த காட்டுப் பன்றி அவா் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பிரவீன்குமாா் காயமடைந்தாா். அவா் சிகிச்சைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.