தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றுவோருக்கு விருது: விண்ணப்பிக்க திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

ஆங்கில வாா்த்தை உள்ளது................ சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றுவோருக்கு விருது: விண்ணப்பிக்க திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

Updated On :26 ஏப்ரல் 2024, 7:14 pm

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றுபவா்கள் முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், தமிழக முதல்வா் மாநில இளைஞா் விருது சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதுடன் ரூ. 1 லட்சம், பாராட்டு பத்திரம், பதக்கம் ஆகியவை வழங்கப்படும். விருதானது 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிப்பவா்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் 15 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் 31.4.2024 அன்று 35 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும். 1.4.2023 முதல் 31.3.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

விண்ணப்பிப்பவா்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரா் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிடுக்க வேண்டும். அவா்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

மத்திய - மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

விருதுக்கு ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளம் மூலம் 1.5.2024 முதல் 1.5.2024 அன்று மாலை 4 மணி வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.