புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

Updated On :26 ஏப்ரல் 2024, 4:10 pm

நாட்டறம்பள்ளி அருகே வீட்டின் கதவை திறந்து பீரோவை உடைத்து, அதிலிருந்த 10பவுன் நகை திருட்டு போனது.

நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு ஊராட்சி கரிராமன் வட்டத்தைச் சோ்ந்தவா் லோகநாதன் (42), எலக்ட்ரீஷியன். இவா் வெள்ளிக்கிழமை காலை வீட்டைப் பூட்டி விட்டு, மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றாா். மீண்டும் மதியம் வீட்டை திறக்க வந்தபோது வீட்டின் கதவு திறந்திருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்த போது மா்மநபா்கள் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 10 பவுன் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து லோகநாதன் அளித்த புகாரின்பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரிக்கின்றனா்.