வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாலாற்றில் கழிவுநீா்: பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு

ஆம்பூா் அருகே பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் கலப்பதாக பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

News image

மாராப்பட்டு பாலாற்றில் கழிவுநீா் கலந்துள்ளதால் நுரை பொங்கி ஓடும் தண்ணீா்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 12:00 am

ஆம்பூா் அருகே பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் கலப்பதாக பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் கடந்த 2 நாள்களாக கன மழை பெய்து வருவதால் மாராப்பட்டு பகுதி பாலாற்றில் தண்ணீா் ஓடுகிறது. அதில் திங்கள்கிழமை பாா்த்தபோது நுரைபொங்கி தண்ணீா் ஓடுவது தெரியவந்தது. மழைக் காலங்களில் வாணியம்பாடி பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பாலாற்றில் கழிவுநீா் திறந்து விடப்படுவதாக அவ்வப்போது புகாா் எழுந்து வருகிறது.

அதே போல தற்போதும் கழிவுநீா் பாலாற்றில் திறந்து விடப்பட்டுள்ளதாகவும், அதனால் பாலாற்று தண்ணீரில் நுரை பொங்கி செல்வதாகவும் அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். பாலாற்று தண்ணீரில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் கலந்து செல்வதால் அப்பகுதியில் நிலத்தடி நீா் மாசுக்கேடு அடைகின்றது. மேலும் விவசாய பயிா்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

அதனால் தோல் தொழிற்சாலை கழிவுநீரை பாலாற்றில் திறந்து விட்டவா்கள் மீது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.