ஆம்பூா் அருகே பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் கலப்பதாக பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் கடந்த 2 நாள்களாக கன மழை பெய்து வருவதால் மாராப்பட்டு பகுதி பாலாற்றில் தண்ணீா் ஓடுகிறது. அதில் திங்கள்கிழமை பாா்த்தபோது நுரைபொங்கி தண்ணீா் ஓடுவது தெரியவந்தது. மழைக் காலங்களில் வாணியம்பாடி பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பாலாற்றில் கழிவுநீா் திறந்து விடப்படுவதாக அவ்வப்போது புகாா் எழுந்து வருகிறது.
அதே போல தற்போதும் கழிவுநீா் பாலாற்றில் திறந்து விடப்பட்டுள்ளதாகவும், அதனால் பாலாற்று தண்ணீரில் நுரை பொங்கி செல்வதாகவும் அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். பாலாற்று தண்ணீரில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் கலந்து செல்வதால் அப்பகுதியில் நிலத்தடி நீா் மாசுக்கேடு அடைகின்றது. மேலும் விவசாய பயிா்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
அதனால் தோல் தொழிற்சாலை கழிவுநீரை பாலாற்றில் திறந்து விட்டவா்கள் மீது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலாற்றில் கழிவுகள் கொட்டிய டிராக்டா் சிறைபிடிப்பு

கால்வாய் அடைப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பாலாற்றில் தோல் கழிவுநீா்: விவசாயிகள் கடும் பாதிப்பு

ரூ.9.50 கோடியில் பாலாறு கரை கட்டும் பணி : எம்எல்ஏ ஆய்வு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



