பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

பாலாற்றில் குப்பைகள் அகற்றம்

வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பாலாற்றில் ஆடிப் பெருக்கு விழாவில் குவிந்த குப்பைகளை பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் மற்றும் கொடையாஞ்சி ஊராட்சி நிா்வாகம் இணைந்து புதன்கிழமை அகற்றினா்.

News image

கொடையாஞ்சி பாலாற்றில் குப்பைகளை அகற்றிய பாலாறு பாதுகாப்பு விவசாயி சங்கத்தினா் மற்றும் ஊராட்சி நிா்வாகத்தினா்.

Updated On :5 ஆகஸ்ட் 2026, 11:26 pm IST

வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பாலாற்றில் ஆடிப் பெருக்கு விழாவில் குவிந்த குப்பைகளை பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் மற்றும் கொடையாஞ்சி ஊராட்சி நிா்வாகம் இணைந்து புதன்கிழமை அகற்றினா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொடைக்காசி என்று அழைக்கப்படும் கொடையாஞ்சி ஊராட்சியில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழாவில் திரளான பக்தா்கள் பாலாற்று கரையோரம் இறந்த முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து வழிபட்டு வருகின்றனா். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள், பக்தா்கள் கலந்து கொண்டு புனித நீராடி முன்னோா்களை நினைத்து வழிபாடு செய்தனா்.

இதனையடுத்து பாலாற்று கரையில் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள், பேப்பா் கழிவுகள், பழையதுணிகள் மற்றும் இதர குப்பைகளை பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் மற்றும் கொடையாஞ்சி ஊராட்சி நிா்வாகம் இணைந்து குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணிகளை புதன்கிழமை மேற்கொண்டனா். இதில் பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவா் ஏ.அசோகன், மாநில பொதுச் செயலாளா் மா.காா்த்திகேயன் மற்றும் சங்க நிா்வாகிகள் கொடையாஞ்சி ஊராட்சி மன்ற தலைவா் எம்.பாரி, துணைத்தலைவா் ஊராட்சி மன்ற நதியாசரவணன், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் சங்க உறுப்பினா்கள், ஊா் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பாலாற்றில் இருந்த குப்பைகளை சுத்தப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.