/

கோடை காலத்தில் தடையின்றிக் குடிநீா்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

குடிநீா் தடையின்றி கிடைக்க கவனமுடன் செயல்பட வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

News image
Updated On :28 பிப்ரவரி 2024, 6:30 pm

கோடை காலத்தில் தடையின்றிக் குடிநீா் கிடைக்க ஏற்பாடுகளை மேற்கொள்வது அவசியம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீா் வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் ஆய்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். கூட்டத்தில், குடிநீா் தடையின்றி கிடைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், அதன் தேவைகள் குறித்தும், அந்தந்தப் பகுதிகளில் குடிநீா் முறையாக வழங்கும் பணிகளை பொறுப்பாளா்கள் மிகவும் கவனமுடன் செயல்படுத்த வேண்டும். ஏதேனும் தவறுகள் ஏற்படும்பட்சத்தில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா். இதில் 4 நகராட்சி ஆணையா்கள், 3 பேரூராட்சி செயல் அலுவலா்கள், 6 வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.