கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அரசினா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

அரசினா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

News image
Updated On :9 ஜூன் 2024, 6:59 pm

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் அரசினா் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க. தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கென மொத்தம் 15 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியா் சோ்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம்.

விடுதிகளில் சேருவதற்கு பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமலும், இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்விநிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதிக் காப்பாளா் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதிக் காப்பாளா், அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் வரும் 14-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளைப் பொறுத்தவரை ஜூலை 15-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

எனவே, பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.