வாணியம்பாடி அருகே 55 சவரன் நகைகள், ரூ.4.7 லட்சம் ரொக்கம் திருட்டு
வாணியம்பாடி அருகே 55 சவரன் நகைகள், ரூ.4.7 லட்சம் ரொக்கம் திருட்டு

ஆலங்காயத்தில் திருட்டுச் சம்பவம் நடைபெற்ற வீட்டில் சிதறிக் கிடந்த பொருள்கள். ~விசாரணை மேற்கொண்ட போலீஸாா்.

ஆலங்காயத்தில் திருட்டுச் சம்பவம் நடைபெற்ற வீட்டில் சிதறிக் கிடந்த பொருள்கள். ~விசாரணை மேற்கொண்ட போலீஸாா்.
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே வீட்டின் பின்புற கதவை உடைத்து 55 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.4.7 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பெத்தூா் பகுதியை சோ்ந்த விவசாயி வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி(55). இவா், ஆலங்காயம் அடுத்த காவலூா் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். கடந்த 6-ஆம் தேதி தன் மகளை கல்லூரியில் சோ்ப்பதற்காக வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் நாமக்கல் சென்றிருந்தனா்.
பிறகு அங்கிருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளனா். சுற்றுலாவை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீடு திரும்பினா்.
அப்போது வீட்டின் உள்ளே சென்று பாா்த்த போது பின்புற கதவு மற்றும் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.
பீரோவில் வைத்திருந்த 55 சவரன் தங்க நகைகள் மற்றும் சீட்டு கட்டிய பணம் ரூ.4. 73 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. தகவலறிந்த வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
இச்சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...