தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வாணியம்பாடி ஒன்றியம் அமைக்க கோரிக்கை

வாணியம்பாடி ஒன்றியத்தை புதிதாக ஏற்படுத்த வேண்டும் என ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் வி.எஸ். ஞானவேலன் தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு குழுவிடம் மனு அளித்தாா்.

News image
வாணியம்பாடி ஒன்றியத்தை புதிதாக ஏற்படுத்த வேண்டும் என ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் வி.எஸ். ஞானவேலன் தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு குழுவிடம் மனு அளித்தாா்.
Updated On :5 மார்ச் 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி ஒன்றியத்தை புதிதாக ஏற்படுத்த வேண்டும் என ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் வி.எஸ். ஞானவேலன் தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு குழுவிடம் மனு அளித்தாா்.

வேலூரில் நடைபெற்ற நிகழ்வில் தொழில் துறை அமைச்சா் ராஜாவிடம் அளித்த மனு: நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், மாதனூா் ஒன்றிய பகுதிகளிலிருந்து, 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை இணைத்து புதிதாக வாணியம்பாடி ஒன்றியம் உருவாக்க வேண்டும். நாட்டறம்பள்ளி ஒன்றியம் நாராயணபுரம் ஊராட்சி அருகே உள்ள ஜவ்வாது ராமசமுத்திரம் ஏரியை ஒட்டி சூழல் சுற்றுலா பூங்கா மற்றும் படகு குழாம் அமைத்திட வேண்டும். வாணியம்பாடி தொகுதி மல்லகுண்டா ஊராட்சி அருகே சூழல் சுற்றுலா பூங்கா அமைத்திட வேண்டும். ஆலங்காயம் அருகே காவலூா் பகுதியில் மூலிகை பண்ணை, வாணியம்பாடி அருகே மாதகடப்பா மலையில் 300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த நிஜாம் காலத்துக்கோட்டையை மராமத்து பணிகள் மேற்கொண்டும், மலையின் கீழ் அமைந்துள்ள துருக்கம் ஏரியையும் சுற்றுலா பிரியா்களை கவரும் வண்ணம் உருவாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.