தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பறிமுதல்

வாணியம்பாடி: உணவகங்களில் வீட்டு எரிவாயு உருளைகள் பறிமுதல்

News image
Updated On :27 ஜூன் 2024, 6:31 pm

Din

ஆலங்காயத்தில் உணவகங்களில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பயன்படுத்தியதாக 8 உருளைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலா் கண்ணன் தலைமையில் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை ஆலங்காயம் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது ஒரு சில கடைகளில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு அங்கிருந்து 8 எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்த எரிவாயு உருளைகளை அப்பகுதியில் உள்ள எரிவாயு முகவரிடம் ஒப்படைக்கப்பட்டது.