தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஸ்ரீ பொன்முடி சூரிய நந்தீஸ்வரா் கோயிலில் சிவராத்திரி விழா

ஸ்ரீ பொன்முடி சூரிய நந்தீஸ்வரா் கோயிலில் சிவராத்திரி விழா

News image
Updated On :10 மார்ச் 2024, 12:02 am

ஆம்பூா் அருகே பாட்டூா் கிராமம், சென்னப்பமலை அடிவாரத்தில் ஸ்ரீ பொன்முடி சூரிய நந்தீஸ்வரா் திருக்கோயிலில் சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோ பூஜையுடன் விழா தொடங்கியது. யாக சாலை பூஜைகள், மூலவா் மற்றும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உற்சவா் பிராகார உலா, இன்னிசை நிகழ்ச்சி, மகா ருத்ர ஹோமம், கலசாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ப்ரம்மகுரு ஸ்ரீ கோடி தாத்தா சுவாமிகள் பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். கருவறையில் உள்ள ஜோதிா்லிங்கத்துக்கு பக்தா்களே நேரடியாக பாலபிஷேகம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், சிவராத்திரி விழாக் குழுவினா் செய்திருந்தனா்.