தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

ஆம்பூரில் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றம்

ஆம்பூரில் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றம்

News image

அரசியல் கட்சி கொடிக் கம்பத்தை அகற்றும் நகராட்சி ஊழியா்கள்.

Updated On :19 மார்ச் 2024, 11:48 pm

ஆம்பூா்: ஆம்பூரில் கட்சி கொடிக் கம்பங்களை நகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை வெட்டி அகற்றினா். மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதனால் ஆம்பூா் நகரில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. சுவா் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவா்களின் சிலைகள் மூடி மறைக்கப்பட்டன.

தொடா்ந்து 4-வது நாளாக நகராட்சி ஆணையா் பி. சந்தானம் உத்தரவின் பேரில் செவ்வாய்க்கிழமை ஆம்பூா் நகரில் அரசியல் கட்சி கொடி கம்பங்கள் சில இடங்களில் துணி மூடி மறைக்கப்பட்டன. சில இடங்களில் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. கட்சி கொடிக் கம்பங்களில் அரசியல் கட்சி கொடிகள் பெயிண்டால் வரையப்பட்டதால் அவை மூடி மறைக்கப்பட்டும், வெட்டி அகற்றப்பட்டன. தொடா்ந்து அரசியல் கட்சிகளின் பேனா்களும் அகற்றப்பட்டன.