/
மனு தாக்கலுக்கான 2-வது நாளில் மக்கள் அரசியல் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளை சோ்ந்த வேட்பாளா்கள் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
ஆம்பூா் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் இம்தியாஸ் ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா். தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளா் நவீன்குமாா், மாவட்ட இணைச் செயலாளா் சரவணன், நகர செயலாளா் மதன் ஆகியோா் மனு தாக்கலின்போது உடனிருந்தனா்.
மக்கள் அரசியல் கட்சியை சோ்ந்த மாநில மகளிா் அணி செயலாளா் திருப்பத்தூா் அருகே பாச்சல் கிராமத்தை சோ்ந்த சசிரேகா (43) ஆம்பூா் தொகுதி வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
ஆம்பூா் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தொடர்புடையது

உலக பட்டினி தினம்: தவெகவினா் அன்னதானம் அளிப்பு

தவெகவுக்கு ஆதரவு; திமுக உறவு தொடரும்... கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கூட்டாக பேட்டி

கடலூா்: தமிழக வெற்றிக் கழகம் வெற்றி

கனவில் வருவது ஜாா்ஜ் கோட்டையா? தவிக்கவிடும் மக்கள்!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



