வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

News image

வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள அறைகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ். உடன் கோட்டாட்சியா் அஜிதா பேகம்.

Updated On :19 மார்ச் 2024, 11:39 pm

வாணியம்பாடி: வாணியம்பாடி தாலுகா அலுவலக வளாகத்தில் வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்படும் அறைகளை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு ஓரிரு தினங்களில் கொண்டு வரப்பட உள்ளன. இவற்றைப் பாதுகாப்பாக வைப்பதற்காக வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அறைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தா்ப்பகராஜ் வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்து, பாதுகாப்பு அறைகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சிறு சிறு குறைபாடுகளை கண்டறிந்த அவா், உடனடியாக சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது குறித்து பாா்வையிட்டு அங்கு போதிய வசதிகளை ஏற்படுத்தி வைக்குமாறு ஆலோசனை கூறினாா். ஆய்வின்போது உதவி தோ்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம், மாவட்ட வழங்கல் அலுவலா் சாந்தி, வாணியம்பாடி வட்டாட்சியா் சிவப்பிரகாசம் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.