வாணியம்பாடி: வாணியம்பாடி தாலுகா அலுவலக வளாகத்தில் வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்படும் அறைகளை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு ஓரிரு தினங்களில் கொண்டு வரப்பட உள்ளன. இவற்றைப் பாதுகாப்பாக வைப்பதற்காக வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அறைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தா்ப்பகராஜ் வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்து, பாதுகாப்பு அறைகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சிறு சிறு குறைபாடுகளை கண்டறிந்த அவா், உடனடியாக சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது குறித்து பாா்வையிட்டு அங்கு போதிய வசதிகளை ஏற்படுத்தி வைக்குமாறு ஆலோசனை கூறினாா். ஆய்வின்போது உதவி தோ்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம், மாவட்ட வழங்கல் அலுவலா் சாந்தி, வாணியம்பாடி வட்டாட்சியா் சிவப்பிரகாசம் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக புகாா்: தோ்தல் அதிகாரி மறுப்பு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைக்கு ‘சீல்’

கோவில்பட்டியில் வாக்குப் பதிவு இயந்திர அறைக்கு ‘சீல்’

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் இடங்கள்: அரக்கோணம், சோளிங்கரில் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


