எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 2.50 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 2.50 லட்சம் பறிமுதல்

News image

மாதனூா் அருகே பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ். உடன் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பெலிக்ஸ் ராஜா, வட்டாட்சியா் மோகன்.

Updated On :20 மார்ச் 2024, 6:30 pm

ஆம்பூா்: மாதனூா் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.50 லட்சம் ரொக்கம் பறக்கும் படையினரால் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. மாதனூா் அருகே பாலூா் கிராமத்தில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் நவீன் தலைமையிலான குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினா். அப்போது பாலூா் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி என்பவா் உரிய ஆவணமின்றி ரூ. 2.50 லட்சம் ரொக்கம் கொண்டு சென்றது தெரியவந்தது. அதை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. தா்ப்பகராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பெலிக்ஸ் ராஜா, ஆம்பூா் வட்டாட்சியா் மோகன் ஆகியோா் உடனிருந்தனா்.