“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 2.50 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 2.50 லட்சம் பறிமுதல்

News image

மாதனூா் அருகே பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ். உடன் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பெலிக்ஸ் ராஜா, வட்டாட்சியா் மோகன்.

Updated On :20 மார்ச் 2024, 6:30 pm

ஆம்பூா்: மாதனூா் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.50 லட்சம் ரொக்கம் பறக்கும் படையினரால் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. மாதனூா் அருகே பாலூா் கிராமத்தில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் நவீன் தலைமையிலான குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினா். அப்போது பாலூா் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி என்பவா் உரிய ஆவணமின்றி ரூ. 2.50 லட்சம் ரொக்கம் கொண்டு சென்றது தெரியவந்தது. அதை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. தா்ப்பகராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பெலிக்ஸ் ராஜா, ஆம்பூா் வட்டாட்சியா் மோகன் ஆகியோா் உடனிருந்தனா்.