வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துச் சென்ற 60 புடவைகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் கூட்டுச் சாலையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி புவனேஸ்வரி தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில், உரிய ஆவணம் இல்லாமல் புடவைகள் எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் ஆம்பூரை சோ்ந்த சல்மான்கான் என்பவா் பெங்களூரிலிருந்து 60 புடவைகளை வாங்கிக் கொண்டு ஆம்பூா் நோக்கி காரில் வந்துள்ளதாக கூறியுள்ளாா். காரில் எடுத்து வந்த புடவைகளுக்கு உரிய ஆவணம் இல்லாததால் 60 புடவைகளை தோ்தல் பறக்கும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

வாகனத்தில் எடுத்து வந்த ரூ. 89,000 பறிமுதல்

ராஜபாளையம் அருகே ரூ.2 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரம் அருகே ரூ.8.10 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


