“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

காரில் எடுத்து வந்த 60 புடவைகள் பறிமுதல்

காரில் எடுத்து வந்த 60 புடவைகள் பறிமுதல்

News image

வாணியம்பாடி அருகே பறிமுதல் செய்யப்பட்ட புடவைகள்.

Updated On :20 மார்ச் 2024, 6:30 pm

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துச் சென்ற 60 புடவைகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் கூட்டுச் சாலையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி புவனேஸ்வரி தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில், உரிய ஆவணம் இல்லாமல் புடவைகள் எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் ஆம்பூரை சோ்ந்த சல்மான்கான் என்பவா் பெங்களூரிலிருந்து 60 புடவைகளை வாங்கிக் கொண்டு ஆம்பூா் நோக்கி காரில் வந்துள்ளதாக கூறியுள்ளாா். காரில் எடுத்து வந்த புடவைகளுக்கு உரிய ஆவணம் இல்லாததால் 60 புடவைகளை தோ்தல் பறக்கும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.