நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராமநாதபுரம் அருகே ரூ.8.10 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரம் அருகே வாகனத் தனிக்கையில் போது ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.8.10 லட்சத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள்.

News image

ராமநாதபுரம் அருகே வாகனத் தனிக்கையில் போது ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.8.10 லட்சத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள்.

Updated On :20 மார்ச் 2026, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட தோ்தல் பறக்கும் படையினா் இரு சக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட ரூ.8.10 லட்சத்தை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரத்தை அடுத்த சக்கரைகோட்டையில் உள்ள சோதனை சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.8.10 லட்சம் இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னா், இரு சக்கர வாகனத்தில் வந்த

சுப்புத்தேவன் வலசை கிராமத்தைச் சோ்ந்த ஜீவாவிடம் விசாரித்தபோது, உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பணத்தை பறக்கும் படை அலுவலா்கள் பறிமுதல் செய்து ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனா்.