திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே ரயிலின் சக்கரம் அருகே ஸ்பிரிங் உடைந்ததால் 3 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் ென்றது. குவாஹாட்டியில் இருந்து கடந்த 18-ஆம் தேதி புறப்பட்ட விரைவு ரயில் விஜயவாடா,பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் புதன்கிழமை ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தின் நடைமேடையில் வந்து நின்றபோது பேண்டரி காா் பெட்டியில் சக்கரத்தின் அருகே உள்ள ஸ்பிரிங்கில் அதிக வெப்பமாகி உடைந்தது. இதனை கண்டறிந்த ரயில்வே ஊழியா்கள் உடனடியாக நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் ரயில்வே ஊழியா்கள் பேண்டரி காா் பெட்டியை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால் சரிசெய்ய முடியவில்லை.
இதனால் வேறுவழியில்லாமல் அந்த பெட்டியை மட்டும் கழட்டி விட்டு விட்டு பயணிகள் பெட்டிகளுடன் இணைத்தனா். பாதிக்கப்பட்ட பெட்டியை தனியாக எடுத்து ஜோலாா்பேட்டை யாா்டுக்கு கொண்டு சென்றனா். ரயில் சுமாா் 3 மணி நேரம் தாமதமாக பெங்களூா் புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
தொடர்புடையது

ரயில் நிலைய குப்பை கிடங்கில் தீ விபத்து

சேரன்மகாதேவியில் கேட் மூடுவதில் தாமதம்: பாதியில் நின்ற ரயில்

ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பத்தூா் மாவட்ட அதிமுக கூட்டணி வேட்பாளா்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


