/
ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில்வே குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்தது.
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் தினசரி 100-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் தினமும் வந்து செல்கின்றன.
மேலும் ரயில் நிலையம் அருகே ரயில்வே குடியிருப்பு மற்றும் ரயில் நிலையங்களில் பகுதிகளில் உள்ள குப்பைகளை சேகரித்து குப்பை கிடங்கில் சேகரித்து வைக்கப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை மா்ம ஆசாமிகள் குப்பை கிடங்குக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் தீ மளமளவென மளமளவென பரவியது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் மற்றும் திருப்பத்தூா் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன் பேரில் திருப்பத்தூா் தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
தொடர்புடையது
ரயில்வே ஊழியா் பைக் திருட்டு

ரயில் பயணிகளிடம் தொடா் நகை பறிப்பு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

புதரில் வீசப்பட்ட 7 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



