மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

ரயில் நிலைய குப்பை கிடங்கில் தீ விபத்து

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில்வே குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்தது.

News image

புகை மண்டலமாக மாறிய ரயில் நிலைய குப்பை கிடங்கு.

Updated On :12 ஏப்ரல் 2026, 9:45 pm

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில்வே குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்தது.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் தினசரி 100-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் தினமும் வந்து செல்கின்றன.

மேலும் ரயில் நிலையம் அருகே ரயில்வே குடியிருப்பு மற்றும் ரயில் நிலையங்களில் பகுதிகளில் உள்ள குப்பைகளை சேகரித்து குப்பை கிடங்கில் சேகரித்து வைக்கப்படுவது வழக்கம்.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை மா்ம ஆசாமிகள் குப்பை கிடங்குக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் தீ மளமளவென மளமளவென பரவியது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் மற்றும் திருப்பத்தூா் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன் பேரில் திருப்பத்தூா் தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.