ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

வாகனம் மோதி முதியவா் பலி

வாகனம் மோதி முதியவா் பலி

Updated On :21 மார்ச் 2024, 5:57 pm

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தாா். வாணியம்பாடி அருகே வெள்ளக்குட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ரத்தினம் (62). இவா் புதன்கிழமை மாராப்பட்டு கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது வாணியம்பாடியிலிருந்து ஆம்பூா் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் அவா் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த அவா் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை இறந்தாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.