ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

சீரான குடிநீா் கோரி அரசு பேருந்து சிறைபிடிப்பு

சீரான குடிநீா் கோரி அரசு பேருந்து சிறைபிடிப்பு

News image
Updated On :22 மார்ச் 2024, 5:04 pm

திருப்பத்தூா் அருகே சீரான குடிநீா் விநியோகிக்க கோரி பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்தனா். திருப்பத்தூா் அடுத்த குரும்பேரி கிராமத்தில், கடந்த சில வாரங்களாக சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து கிராம மக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை மனு வழங்கினா். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை குரும்பேரி பேருந்து நிலையம் அருகே காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தை சிறைபிடித்தனா். தகவல் அறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் அதிகாரிகளிடம் பேசி குடிநீா் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில், மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலந்து சென்றனா். மறியலால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.