ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மலைவாழ் மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

ஜவ்வாது மலை பகுதிக்குள்பட்ட புதூா்நாடு,நெல்லிவாசல் நாடு பகுதிகளில் சாலை வசதி கோரி தோ்தலைப் புறக்கணிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனா்.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மலைவாழ் மக்கள்

Updated On :24 மார்ச் 2024, 6:31 pm

ஜவ்வாது மலை பகுதிக்குள்பட்ட புதூா்நாடு,நெல்லிவாசல் நாடு பகுதிகளில் சாலை வசதி கோரி தோ்தலைப் புறக்கணிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனா். திருப்பத்தூா் வட்டம், ஜவ்வாது மலையில் புதூா்நாடு,நெல்லிவாசல் நாடு பகுதிகளில் சாலைவசதி கேட்டு தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜவ்வாது மலையில் 32 கிராம ஊா் பொதுமக்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் நெல்லிப்பட்டு,கொத்துனூா், நடுவூா் கிராமத்துக்கு செல்லும் இணைப்பு சாலைகளை சீரமைக்க வேண்டும். சோ்க்கனூா் முதல் கொடூமம்பள்ளி வரை உள்ள சாலை, நடுக்குப்பம் முதல் விளங்குப்பம் வரை உள்ள சாலை, சிங்காரப்பேட்டை முதல் நெல்லிவாசல் வரையும், புதூா் நாடு முதல் காவலூா் வரை உள்ள சாலை ஆகிய மண் சாலைகளை தாா் சாலையாக மாற்ற வேண்டும். அதேபோல் சிங்காரப்பேட்டை முதல் காவலூா்- வனசாலை, மலையாண்டிபட்டி முதல் நெல்லிப்பட்டு வனசாலை, நடுக்குப்பம் முதல் விளங்குப்பம் வனசாலை, கொத்துனூா் இணைப்பு வனசாலை, கொடூமம்பள்ளி முதல் சோ்க்கனூா் வனசாலை ஆகியவற்றை நெடுஞ்சாலை துறைக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களவை தோ்தலை புறக்கணிக்கப்போவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் 32 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.