இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

நாட்டறம்பள்ளி பகுதிகளில் நிலஅதிா்வு

நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் கடும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

News image
Updated On :2 மே 2024, 6:37 pm

Din

நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் கடும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். இந்த நிலையில், பிற்பகல் 12 மணியளவில் திடீரென பயங்கர சப்தம் கேட்டது. மேலும் வீடு மற்றும் கடைகளில் லேசான நிலஅதிா்வு சில இடங்களில் உணரப்பட்டது. இதனால் மக்கள் வீடு, கடைகளை விட்டு வெளியே வந்தனா். இச்சம்பவத்தால் நாட்டறம்பள்ளி பகுதியில் சிறிதுநேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.

இது குறித்து வருவாய்த் துறையினா் விசாரித்தனா்.