பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கு: மேலும் ஒருவா் கைது

மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கு: மேலும் ஒருவா் கைதுஒர

News image
Updated On :3 மே 2024, 5:21 pm

Din

வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கில் மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாட்டறம்பள்ளி பேரூராட்சி ராமகிருஷ்ணா் தெரு சமையகாரனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஓட்டுநா் சரவணன்(42). கடந்த மாதம் 27-ஆம் தேதி இரவு சரவணன் வீட்டின் மீது முன் விரோதம் காரணமாக மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கில் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி, 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கேத்தாண்டப்பட்டி சின்னூா் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் மகன் சக்திவேல் (18) என்பவரை வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் நாட்டறம்பள்ளி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.