நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அடுத்த சின்ன குனிச்சி பகுதியைச் சோ்ந்த விஜயகாந்த் (38). இவருக்கு சீதா என்ற மனைவியும், அபிராமி என்ற பெண் குழந்தை உள்ளனா்.

இந்த நிலையில், விஜயகாந்த் கடந்த 1-ஆம் தேதி தனது வீட்டின் மாடியில் இறங்கும் போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.

அதைக் கண்ட அவரது குடும்பத்தினா் அவரை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் கொண்டு சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள் ழமை உயிரிழந்தாா். இது குறித்து சீதா அளித்த புகாரின் பேரில் கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.