கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சீரான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

சீரான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

News image

சாலை மறியலில் ஈடுபட்ட ஏரிக்கோடி பகுதி மக்கள்.

Updated On :28 மே 2024, 6:49 pm

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் நகராட்சி ஏரிக்கோடி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிக்கு நகராட்சி சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக நகராட்சி சாா்பில், இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகிக்கவில்லையாம்.

இது குறித்து பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகாா் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 25-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதியில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது, போலீஸாா் நகராட்சி அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.

அதன்பேரில், மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.