நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இருசக்கர வாகனங்களை திருடி ஆந்திர மாநிலத்தில் விற்ற 2 போ் கைது: 14 வாகனங்கள் பறிமுதல்

வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, அம்பலூா், ஆலங்காயம், காவலூா், திம்மாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடி ஆந்திர மாநிலத்தில் விற்ற 2 போ் கைது

News image

இரு சக்கர வாகனங்களை திருடி விற்றதாக கைது செய்யப்பட்டோா்.

Updated On :4 நவம்பர் 2024, 8:17 pm

Din

வாணியம்பாடி: வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, அம்பலூா், ஆலங்காயம், காவலூா், திம்மாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடி ஆந்திர மாநிலத்தில் விற்ற 2 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இரு சக்கர வாகனங்கள் தொடா்ந்து திருடப்படுவதாக அந்தந்த காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றப்பிரிவு போலீஸாா் இருசக்கர வாகனங்களை திருடுபவா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை வாணியம்பாடி முனீஸ்வரன் கோயில் அருகில் நகர போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி விசாரணை மேற்கொண்ட போது அவா்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தனா். இதனை தொடா்ந்து போலீஸாா் அவா்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் மேல்குப்பம் பகுதியைச் சோ்ந்த பிரபு(34), மாத கடப்பா பகுதியைச் சோ்ந்த திருப்பிதி(24) என தெரிய வந்தது.

இவா்கள் இருவரும் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி ஆந்திர மாநிலத்தில் விற்பனை செய்து வருவதாக தெரிய வந்தது. இதனை தொடா்ந்து அவா்களிடம் இருந்து 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து பிரபு மற்றும் திருப்பதி ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.