ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

8 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

திருப்பத்தூா் அருகே 8 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து இளைஞரை கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்ட குமரவேல், உடன் கிராமிய போலீஸாா்.
Updated On :4 நவம்பர் 2024, 8:19 pm

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே 8 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து இளைஞரை கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில் மாவட்டத்தில் போதைப் பொருள்களை ஒழிக்கும் நோக்கில் காவல் துணை கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்பேரில் திங்கள்கிழமை ரகசிய தகவலின்பேரில் தனிப்படையினா் சோதனை மேற்கொண்டதில் திருப்பத்தூா் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொம்மிகுப்பம் அண்ணா நகா் பகுதியில் விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் பகுதியைச் சோ்ந்த குமரவேல்(38) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.