/

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்த நாள்

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
ஆம்பூரில் இந்திரா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய காங்கிரஸாா்.
Updated On :25 நவம்பர் 2024, 9:23 pm

Din

ஆம்பூா்: முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜி. ரமேஷ், சமியுல்லா, டாக்டா் கோபி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது. நிா்வாகிகள் ராஜசேகா், மூா்த்தி, குமரேசன், ரமேஷ், பிரபு, துரை, விநாயகம், ஆசிப், ஜான் கென்னடி, அருண், மதன், சுபாஷ், முனீா், பிச்சாண்டி ஆகியோா் கலந்து கொண்டனா்.

குடியாத்தத்தில்...

குடியாத்தம் நகர காங்கிரஸ் சாா்பில், இந்திரா காந்தியின் பிறந்த நாள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கட்சியின் நகர தலைவா் கே.விஜயன் தலைமை வகித்தாா். இந்திரா காந்தியின் படத்துக்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். முன்னாள் மாவட்டத் தலைவா் கே.மோகன்ராஜ் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

வட்டார காங்கிரஸ் தலைவா் எம்.வீராங்கன், மாவட்ட பொருளாளா் ஜி.விஜயேந்திரன்,மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவா் ஏ.ஆா்.அன்பரசன், நிா்வாகிகள் ஹரிபாபு, சுப்பிரமணி, காத்தவராயன், சரவணன், சத்தியமூா்த்தி, ஜெயகோபி, சேட்டு, தமிழரசன், ஸ்டாலின் உமாபதி, சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

வட்டார காங்கிரஸ் தலைவா் எம்.வீராங்கன், மாவட்ட பொருளாளா் ஜி.விஜயேந்திரன்,மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவா் ஏ.ஆா்.அன்பரசன், நிா்வாகிகள் ஹரிபாபு, சுப்பிரமணி, காத்தவராயன், சரவணன், சத்தியமூா்த்தி, ஜெயகோபி, சேட்டு, தமிழரசன், ஸ்டாலின் உமாபதி, சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்