தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அக். 31-க்குள் சொத்து வரி செலுத்தினால் 5% தள்ளுபடி

அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% தள்ளுபடி வழங்கப்படும் என திருப்பத்தூா் ஆணையா் சாந்தி தெரிவித்தாா்.

News image
Updated On :18 அக்டோபர் 2024, 6:33 pm

Din

அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% தள்ளுபடி வழங்கப்படும் என திருப்பத்தூா் ஆணையா் சாந்தி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் நகராட்சி எல்லைக்குள்பட்ட பொதுமக்கள் இரண்டாம் அரையாண்டுக்குரிய சொத்து வரியை அக். 31-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகையாக கழிக்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியில்லா இனங்கள் நகராட்சி கடை வாடகை, தொழில்வரி, குடிநீா் கட்டணத்தை செலுத்தி நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.