ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால கட்டுமானத்தின் போது சென்ட்ரிங் சரிந்து விழுந்து மேம்பாலம் சனிக்கிழமை சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தில் 6 போ் காயம் அடைந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. ஆம்பூா் நகர பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் சுமாா் ரூ.143 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட மேம்பாலமாக கட்டப்பட்டு வரப்படுகிறது. அதில் ரயில் நிலையம் அருகில் திடீரென சனிக்கிழமை இரவு சென்ட்ரிங் சரிந்து விழுந்தது. அதில் மேம்பாலத்தின் மீது பணியில் ஈடுபட்டிருந்த 6 வடமாநில தொழிலாளா்கள் காயமடைந்தனா். அதில் 3 போ் மேல்சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
விபத்து நடந்த பகுதியில் ஆம்பூா் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் ஆம்பூா் நகர காவல் ஆய்வாளா் ரமேஷ் மற்றும் போலீஸாா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், போக்குவரத்து சீரமைக்கும் பணியையும் மேற்கொண்டனா்.
தொடர்புடையது

சிதம்பரம் அருகே 20 அடி உள்வாங்கிய மேம்பாலம்! போக்குவரத்து நிறுத்தம்!

18 ஆண்டுகளாக நீளும் அரை வட்ட சுற்றுச் சாலை!

நாகை பேருந்து நிலையத்தில் மேற்கூரை காரை விழுந்து பயணி காயம்

மரம் விழுந்து மின்கம்பங்கள் சேதம்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


